பரிபாடல் போற்றும் மாயோன்
பரிபாடல் போற்றும் மாயோன் சங்க இலக்கியங்களில் பதினெண் மேல் கணக்கு நூல்களுள் ஒன்று. பரிபாடல் இவை தமிழகத்தில் உள்ள ஐந்திணைக்குரிய தெய்வங்களான சிவபெருமான் கொற்றவை வைகை போன்ற தெய்வங்களை பற்றி பாடப்பட்டுள்ளது இவற்றில் மாயோன் ஆன கண்ணனின் பாடல்களை நாம் இங்கு காணலாம். பரிபாடல் 3 மா அயோயே! மாஅயோயே! மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணி திகழ் உருபின் மா அயோயே! பொருள் பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் பெருமானே!உன் சேவடி பற்றும் அடியாரே பிறவிப் பெருங்கடல் கடப்பர் .ஆகையால் நீல மேனி கொண்ட திருமாலே உன் சிவந்த பாதங்களை பற்றி நான் பெருங் கடல் கடப்பேன். பரிபாடல் 15 "புவ்வத்தாமரை புரையும் கண்ணன் வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன் எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்" பொருள் தாமரை மலர் போல சிவந்த கண்களும் கரிய திருமேனியும் கொண்டவன் கண்ணன். உலகத்தில் தோன்றும் அனைத்து துன்பங்களையும் அவனைத் தொழுது நீக்குவோம்.